மருத்துவ சங்கம் நடத்துவது போராட்டமா? அல்லது அரசியலா?
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்துவது தொழிற்சங்கப் போராட்டமா அல்லது அரசியல் ரீதியான போராட்டமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்துவது தொழிற்சங்கப் போராட்டமா அல்லது அரசியல் ரீதியான போராட்டமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பம்
அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சிகிச்சையை நிறைவு செய்து கொண்டு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கபூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நேற்று புதன்கிழமை (09) நாடு திரும்பியுள்ளார்.
ஊழல், இலஞ்சமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணியொன்று நடத்தப்பட்டது. சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணி சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கியஸ்தர்கள் உறுதிப்பிரமாணம் செய்து கொள்வதைப் படத்தில் காணலாம்.
எக்காரணம் கொண்டும் அரசாங்கம் இந்தியாவுடன் ‘சீபா’ ஒப்பந்தத்தை கைச்சாத்திடாது.பொருளாதார, தொழில்நுட்பத்துறை சார்ந்த நாட்டுக்கு சாதகமான ஒப்பந்தம் ஒன்றையே கைச்சாத்திடவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.