17072024Wed
Last update:Wed, 08 May 2024

இந்திய மீனவர்கள் கைது (Update)

9 indian fisermen arrestedசர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறப்படும் 09 இந்திய மீனவர்கள் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
இதேவேளை தலைமன்னார் பகுதியில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
 
 
தலைமன்னார் பகுதியில் கைதான 06 பேரும், இன்று (26) மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது, அவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.
 
 
இதேவேளை கடந்த நவம்பர் 18ஆம் திகதி இவ்வாறு அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த 14 இந்திய மீனவர்களும் அவர்களது 3 படகுகளும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தீபாவளியை முன்னிட்டு இரு நாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.