17072024Wed
Last update:Wed, 08 May 2024

கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு T.N.A கடிதம்

TamilNationaAlliance2அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி அவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் விடுதலை குறித்த ஜனாதிபதியின் உண்மையான நிலைப் பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இம்மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்வதாக வழங்கிய வாக்குறுதியை நம்பியே கைதிகள் உண்ணாவிரதப் போராட் டத்தைக் கைவிட்டிருந்தனர். ஆனால் இன்றுவரை அவர் களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப் பட்டு நிரந்தர தீர்வு எட்டப் படவில்லை.

இந்நிலையில் பலரும் முரண்பட்ட கருத்துக் களை தெரிவித்து வருவதால், தங்களின் உண்மையான நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கடிதத்தை அனுப்பி வைப்பதாக கூட்டமைப்பு எம்.பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதும், கடந்த ஆட்சிகளில் தமது வழக்குகளை துரிதப் படுத்துமாறும், தம்மீதான குற்றச்சாட்டுக் களை முன்வைக்குமாறும் கோரி தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட பல போராட்டங்களையும் தாங்கள் அறிவீர்கள். அவர்களது அத்தகைய நியாயமான போராட்டங்கள் கூட கடந்த காலங்களில் கவனிக்கப்படவில்லை.

இந்நிலையில் உடனடி விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம் 17ஆம் திகதிவரை தொடர்ந்தது. தாங்கள் அரசியல் கைதிக ளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை இம்மாதம் 7ஆம் திகதிக்கு முன்பாக பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நம்பி, எதிர்க்கட் சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமாகிய இரா.

சம்பந் தன் தங்களின் வாக்குறுதியை கைதிக ளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலைப் போராட் டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

ஆனால் இன்றுவரை கைதிகளின் விடயத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களோடு அச்சுறுத்தல் களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இவ்வாண்டு ஜனவரி 8ஆம் திகதி ஒன்று சேர்ந்து ஜனநாயக ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி தங்களின் தலை மையில் ஒரு நல்லாட்சிக்கான புதிய அர சாங்கத்தை உருவாக்கினார்கள்.

இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் பிரச்சி னைக்கு இன்றுவரை முடிவு காணாம லிருப்பது எமக்கு மிகுந்த அவநம்பிக்கை யையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

8 முதல் 20 வருடங்களாக நீதிக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் வதைபடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளின் பிரச்சி னையை மனிதாபிமான ரீதியில் அணுகி, அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வ தாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப் பிடப்பட்டுள்ளது.