16072024Tue
Last update:Wed, 08 May 2024

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.770 சம்பளம் வழங்க தொழில் அமைச்சு யோசனை

john seneviratne colour 1நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தல்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 770 ரூபாவை வழங்குமாறு தாம் யோசனை கூறுவதாக தொழில், தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்தின கூறியுள்ளார்.

இரு தரப்பினருக்கும் அநீதி நேரிடாவண்ணம் இணக்கப்பாட்டுக்கு வந்து, அதனை அமுலாக்க தேவையான கூட்டு ஒப்பந்தத்தை அவசரமாக கைச்சாத்திட நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார். தோட்டக் கம்பனி பிரதிநிதிகள்.

தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக ளின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட் சம்பளம் 500 ரூபா, வருகைக்கான கொடுப்பனவு 240 ரூபா, விற்பனையாகும் விலைக்கேற்ப வழங்கப்படும் 30 ரூபாவுடன் நாட் சம்பளம் 770 ரூபாவை வழங்க நான் யோசனை தெரிவிக்கிறேன் என்றும் அமைச்சர் தொடர்ந்து தெரிவித்தார்.

தற்போது நாட்டில் பெருந்தோட்டத்துறை நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி யுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள் தொடர் பாகவும் பரிசீலித்து இரு தரப்பினரினதும் இணக்கப்பாட்டுடன் இந்தப் பிரச் சினையைத் துரிதமாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.