17072024Wed
Last update:Wed, 08 May 2024

பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சம்மேளனத்தினால் வழங்கப்படும் கௌரவ விருது ஜனாதிபதி அவர்களுக்கு.

110 1140x5502xபொதுநலவாய நாடுகளின் இளைஞர் சமூதாயத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்காகவும் பங்களிப்புக்காகவும் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சம்மேளனத்தினால் ஜனாதிபதி அவர்களை கௌரவிப்பதற்கான விருது வழங்கப்பட்டது.

இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் அஹமட் அடமு (Ahamed Adamu) அவர்களால் நேற்று (28) மோல்டாவில் ஜனாதிபதி அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இதன்போது பொதுநலவாய இளைஞர் சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஷிரோமி வத்சலா சமரக்கோன், தாரிக்கா திலீபனி, மொஹமட் ஹூஸ்னி (mohomed Husni) ஆகியோர் இணைந்திருந்தனர்.