17072024Wed
Last update:Wed, 08 May 2024

ஜனாதிபதி அவர்களின் அனுதாபச் செய்தி

Presidential Media Unit Common Banner 1கௌரவ பிரான்ஸ் ஜனாதிபதி பெங்குவா ஹொலன்ட் அவர்கள்

கெளரவ ஜனாதிபதி அவர்களே,

பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி மேலும் பல நபர்களுக்கு காயம் விளைவித்த 2015 நவம்பர் 13ஆம் திகதி பரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.

பிரான்ஸ் அரசுக்கும் மக்களுக்கும், மரணித்தவர்களதும் காயப்பட்டவர்களதும் குடும்பங்களின் உறுப்பினர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதற்காக இலங்கை அரசுடனும் மக்களுடனும் நான் இணைந்துகொள்கின்றேன்.

பயங்கரவாதத்தினால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்த நாடு என்ற ரீதியில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களை இலங்கை வன்மையாக கண்டிக்கின்றது.

பயங்கரவாத மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.