07062025Sat
Last update:Wed, 04 Jun 2025

வெற்றியீட்டிய கட்சிகளுக்கு அபி.குழு தலைமைப் பதவி

downloadஜனாதிபதியின் நடவடிக்கைக்கு டளஸ் பாராட்டு

மாவட்டங்களில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு மாவட்டக் குழுக்களில் தலைவர் பதவியை வழங்க ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை ஜனநாயக நடவடிக்கை என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

 இதன் பிரகாரம் ஐ. தே. முன்னணிக்கு 11 மாவட்டங்க ளிலும், ஐ. ம. சு. முன்னணிக்கு 08 மாவட்டங்களிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 03 மாவட்டங்களிலும் தலைமைப் பதவிகள் கிடைக்குமென அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த அரசின் பதவிக்காலத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே அபிவிருத்திக் குழுக்களில் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுக்களில் பங்கேற்காமல் கடமையாற்றினர்.

தற் போதைய அரசு புதிதாக இந்த நடவடிக் கையை மேற்கொண்டுள்ளமை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அபிவிருத்திக் குழு கூட்டங்களில் பங்கு பற்ற இயலுமாகும்