16072024Tue
Last update:Wed, 08 May 2024

வவுனியா வெள்ளம்: 104 பேர் இன்னும் முகாமில்

vavuniya flood 30 family 104 members 1வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த  30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 94 குடும்பங்களைச் சேர்ந்த 389 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

மூன்று வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாதர்பனிக்கர் மகிழங்குளம் பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இப்பகுதி மக்களின் தற்காலிக வீடுகள் பாதிப்படைந்ததால் அங்கிருந்து வெளியேறிய மக்களை தங்க வைப்பதற்காக மாதர்பனிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் ஒரு தற்காலிக நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

vavuniya flood 30 family 104 members 2