கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களை புனரமைக்க ஐந்தாண்டு சிறப்பு திட்டம்

வடக்கு பிரச்சினைகளை கையாள பிரதமர் செயலகத்தில் விசேட அதிகாரி கிளிநொச்சியில் பிரதமர்

Wickremsinghe IIயுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு விசேட ஐந்தாண்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்பும் வகையில் ஐந்தாண்டு திட்டமொன்றை நடைமுறைப் படுத்தப் போவதாகவும், அதேவேளை முழு வடக்கினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் செயலகத்தில் விசேட அதிகாரியொரு வரை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் டி. எம். சுவாமிநாதன். பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன். குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி அரசாங்க அதிபர் அருமைநாயகம், பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும்.

இந்த இரண்டு மாவட்டங்களையும் மீளக் கட்டியெழுப்ப பாரிய பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இங்கு சில அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள். சிவில் சமூகத்தினருக்கும், படையினருக்கும் இதற்காக வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு நாம் நன்றி கூறக் கட்டமைப்பட்டுள்ளோம்.

நன்றி கூறுவதன் மூலமாக மட்டும் நாம் திருப்திப்பட முடியாது. இந்த மாவட்டங்களில் மென்மேலும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் இலங்கையின் மிக வறுமை நிறைந்த பிரதேசமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நிகழ்ந்தன. எனினும் 2014 ல் மொனராகலை மாவட்டமே மிக வறிய மாவட்டமாகக் கணிக்கப்படுள்ளது. இதற்கிணங்க இந்த மாவட்டங்களில் சில வேலைத் திட்டங்கள் இடம்பெற் றுள்ளன. எனினும் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்படவில்லை என்பதைக் குறிப்பிட முடியும்.

பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் சிவில் சமூகத்தினரிடம் மாற்றலாக வேண்டும் என்ற தேவையே தற்போது உள்ளது.

இதற்காக நாம் சிவில் அமைப்புக்களைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பொறுப்பை சிவில் சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்கள் போலன்றி இங்கு சமூ கத்தை நாம் மீள உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக இப்பிரதேசங்களின் சிவில் சமூகத்தை நாம் பலப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்வரும் ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென விசேட வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்த தீர்மானித்துள்ளோம்.

யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் மன நிலையில் மாற்றம் அவசியம், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுக்க அரசியல் பொறிமுறையொன்றை சிவில் சமூகம் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. எமக்கு மக்களிடம் இருந்தும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள மகஜர்களை கவனித்திற்கொண்டு செயற்படவுள்ளோம்.

நான் வடக்கிற்கு விஜயம் செய்து இங்குள்ள பிரச்சினைகளை நேரில் கண்ட பின்னர் வடக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தனியான அதிகாரியொருவரை பிரதமர் செயலகத்தில் நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர் மூலம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது பிரச்சினைகளை பிரதமரிடம் நேரடியாகத் தெரிவிக்க இந்நிகழ்வில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதம ரினால் நேற்று நட்ட ஈடும் கையளிக் கப்பட்டமை குறிப்பிடத்தக்கது