18042024Thu
Last update:Thu, 18 Apr 2024

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு சூழல் பாதுகாப்பு அனுமதி

colranjith siyambalapitiya155219432 4168885 20042016 att cmyசந்தேகங்கள் இருந்தால் தமிழ் கூட்டமைப்புடன் பேசத் தயார்

சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான சூழல் பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதால் இந்த வருடத்தினுள் இந்த திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.


முத்தமிழ் வித்தகருக்கு காரைதீவில் உருவச் சிலை

coldownload121858004 4168380 20042016 spp gryஅறுபத்தொன்பது வருடங்களின் பின்னர் சுவாமி விபுலானந்தருக்கு இன்று மீண்டும் காரைதீவில் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகின்றது. உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாருக்கு இன்று அவர் பிறந்த இடமான காரைதீவு மண்ணில் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்படுகிறது.

குறைந்த வருமானம் பெறுவோர் மீது வரி சுமையை சுமத்தப் போவதில்லை

RANIL ndk 4 150pxவற் வரி அதிகரிப்பு மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை சில துறைகளில் சேர்ப்பதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட கடன் சுமையே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை நேற்று (20) சந்தித்தபோது கூறினார்.

ரூ. 1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

water cutகுடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார்.

வற்வரியில் திருத்தம்

z p06 security 20042016 kaaஅத்தியாவசிய பொருட்கள், நீர், மின்சாரம், மருந்து வகைகளில் அதிகரிப்பில்லை

மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத வகையில் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியில் திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்ம யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.